பாதியில் நின்ற சாலை பணி

Update: 2022-04-17 11:38 GMT
திருவள்ளூவர் மாவட்டம் ஆவடி ஜாக்நகர் அன்னை தெரசா தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டு, பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. பணி தொடங்கி 8 மாதங்களாகியும் தற்போது வரை முடிக்கப்படவில்லை. வெறும் கள்ளும் முள்ளும் நிரம்பிய சாலையில் நடந்து செல்ல பாதசாரிகள் அவதிப்படுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகளுக்கும் சிரமமாக இருக்கிறது. எனவே விரைவில் பணி முடிய சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைத்து தர வேண்டும்.

மேலும் செய்திகள்