ஒருவழி பாதையான தார்சாலை

Update: 2023-02-08 12:29 GMT

கரூர் மாவட்டம் கரூர் -சேலம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலையில் இருந்து மோதுகாடு பகுதிக்கு செல்வதற்கு தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார்சாலையின் இருபுறமும் மண்கள் கொட்டப்பட்டும், பல்வேறு செடி- கொடிகள் முளைத்தும் உள்ளதால் தார் சாலையின் அகலம் குறைந்துள்ளது. இதனால் ஒரு வழி பாதைபோல் இந்த தார் சாலை காட்சி அளிக்கிறது. விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு இடுபொருட்களையும், விளைந்த பின் விளை பொருட்களையும் கொண்டு வரும்போது மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல் மோதுக்காடு பகுதியில் உள்ள வீடுகளுக்கு விசேஷங்களுக்கு வருபவர்களும் தடுமாறி செல்கின்றனர். எனவே விரைந்து நடவடிக்கை எடுத்து அகலம் குறைவாக உள்ள தார் சாலை ஓரத்தில் போடப்பட்டுள்ள மண்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்