சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-02-05 12:43 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி கிராமம் மெயின் சாலை பராமரிப்பின்றி உள்ளது. இதனால் சாலை குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதன்காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையை மிகுந்த சிரமத்துடன் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், சாலை விபத்துகளும் அடிக்கடி நடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்