சேலம் -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் தவுட்டுப்பாளையம் போலீஸ் செக்போஸ்ட் வழியாக சர்வீஸ் சாலை செல்கிறது. மேம்பாலம் அமைக்கும் பணி நீண்ட காலமாக நடைபெற்று வருவதால் அனைத்து வகையான வாகனங்களும் இந்த சர்வீஸ் சாலை வழியாகத்தான் செல்கிறது. பழைய போலீஸ் செக்போஸ்ட் வழியாக செல்லும் தார் சாலை மிகவும் சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் நிலைதடுமாறி செல்கின்றன. இரவு நேரங்களில் இந்த சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைத்தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சர்வீஸ் சாலையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.