குண்டும், குழியுமான சாலை

Update: 2022-07-19 15:45 GMT

 ஆனைமலை-வேட்டைக்காரன்புதூர் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் சாலையின் இருபுறம் உள்ள கால்வாய் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி, நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை சீரமைத்து, கால்வாய்களை தூர்வார சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குமார், ஆனைமலை.

மேலும் செய்திகள்