சேறும், சகதியுமான சாலை

Update: 2023-02-01 17:37 GMT
குறிஞ்சிபாடி தாலுகா வழுதலம்பட்டு ஊராட்சி குள்ளஞ்சாவடி பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள சிமெண்டு சாலை பலத்த சேதமடைந்து சேறும், சகதியுனமாக காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் சேற்றில் வழுக்கி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்