மந்தமாக நடைபெறும் சாலை விரிவாக்க பணி

Update: 2023-02-01 17:36 GMT
குறிஞ்சிப்பாடி பஸ் நிலையத்தில் இருந்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் வரை சாலை விரிவாக்கப் பணி நடைபொற்று வருகிறது. இப்பணிகள் மிகவும் மந்தகதியில் நடைபெற்று வருவதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு சாலையை கடந்து செல்வதே பெரும் சவாலாக உள்ளது. எனவே சாலை விரிவாக்க பணியை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்