சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-01-29 15:09 GMT

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் மருங்கூர்-நெய்குப்பை இடையே உள்ள சாலை குண்டும்,குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குண்டும்,குழியுமான சாலையினால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.



மேலும் செய்திகள்