சாலையை சீரமைக்க வேண்டும்

Update: 2023-01-29 12:06 GMT

பார்வதிபுரத்தில் இருந்து கணியாகுளம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தில் பாயும் கால்வாயின் மறுபுறம் 2 டாஸ்மாக் கடைகள், குடியிருப்புகளும் அமைந்துள்ளது. இந்த சாலை மிகவும் குறுகியதாகவும், சேதமடைந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையிலும் காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ-மாணவிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருதுடன் கால்வாயிக்குள் விழுந்து விபத்திலும் சிக்கி வருகின்றனர். எனவே, சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-விஜயலட்சுமி, பார்வதிபுரம்.

மேலும் செய்திகள்