சாலை, தெருவிளக்கு வசதி வேண்டும்

Update: 2023-01-29 11:55 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதியில் அமைந்துள்ள அரையப்பட்டி தெற்கு வழி செல்லும் சாலை 3 ஆண்டுகளுக்கு மேலாக சீரமைப்பு இல்லாத நிலையில் உள்ளது. இந்த சாலையானது அரையப்பட்டி , வெள்ளக்கொல்லை மற்றும் புதுக்காடு ஊர் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3 ஊர்களுக்கு இச்சாலை முக்கிய வழித்தடமாக உள்ள நிலையில் இச்சாலை சீரமைக்கப்படாமல் இருப்பதால் மக்களின் போக்குவரத்திற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் இச்சாலையில் தெருவிளக்கு வசதி இல்லாத காரணத்தினால் கல்லூரி மற்றும் அன்றாடம் வேலைக்கு சென்று இரவு நேரங்களில் வீடு திரும்பும் மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் சாலை விளக்கு இல்லாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்