வாகன ஓட்டிகள் அவதி

Update: 2023-01-29 11:52 GMT

திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தாலுகா, மணிகண்டம் ஒன்றியம் ஆலம்பட்டி முதல் நடுப்பட்டி வரையிலான சாலை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு புதுப்பிக்கும் வகையில் ஜல்லிக்கற்கள் போடப்பட்டது. ஆனால் தற்போது வரை தார்சாலை அமைக்கப்படாமல் உள்ளதால் இந்த சாலையின் வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மழை பெய்யும் போது இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுவதினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்