சாலையோரத்தில் பள்ளம்

Update: 2023-01-29 11:52 GMT

திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், புள்ளம்பாடி முதல் செங்கரையூர் வரை சாலையின் பக்கவாட்டில் மிகவும் பள்ளமாக உள்ளது. இதனால் இந்த வழியாக இரவு நேரத்தில் 2 நான்கு சக்கர வாகனங்கள் ஒரே நேரத்தில் சாலையில் செல்லும்போது சாலையோரம் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர பள்ளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக வெங்கடாசலபுரம், ஆலங்குடி மற்றும் கல்விகுடி பகுதிகளில் மிக மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்