கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-01-25 13:11 GMT

கரூர் மாவட்டம், காகிதபுரம் மின்சார நிலைய அலுவலகம் எதிரில் உள்ள சாலை, மண் சாலையாகவும், குண்டு, குழியுமாகவும் காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த சாலையை அகற்றிவிட்டு புதிய சாலை அமைக்கும் பணி தொடங்கியது. இதையொட்டி சாலையை பெயர்த்து ஜல்லி கற்கள் கொட்டப்பட்டுள்ளன. இந்நிலையில் 6 மாதங்கள் ஆகியும் பணி முடிவடையாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்