சாலை சீரமைக்கப்படுமா?

Update: 2022-07-19 12:12 GMT
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் உள்ளூர் கிராமத்தில் உள்ள தெருக்களில் சாலைகள் பராமரிப்பின்றி குண்டும்,குழியுமாக காட்சி அளிக்கிறது. குறிப்பாக செட்டிமண்டபம் முதல் பஞ்சாயத்து அலுவலகம் வரை உள்ள சாலை மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், குண்டும்,குழியுமான சாலையினால் வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள சாலையை சீரமைத்து தர நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்