ஆபத்தான வேகத்தடை

Update: 2023-01-22 11:15 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம் காரை கிராமம் காலனி தெரு அருகே உள்ள புதுக்குறிச்சி இணைப்பு சாலையில் ஒரு பெரிய வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை வர்ண கோடுகள் பூசப்படாமல் உள்ளதால் தூரத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு சாலையில் வேகத்தடை இருப்பது தெரியாமல் அவர்கள் அருகே வந்து திடீரென பிரேக் அடிப்பதால் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்