ஆபத்தை எச்சரிக்காத பலகை

Update: 2023-01-22 11:08 GMT

ராதாபுரம் தாலுகா செட்டிகுளம் புதுமனை விலக்கில் அபாயகரமான சாலை வளைவில் அமைக்கப்பட்டு இருந்த எச்சரிக்கை பலகையில் இருந்த எழுத்துகள் முழுவதுமாக அழிந்து விட்டது. இதனால் இரவில் அந்த வழியாக வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. எனவே காட்சிப்பொருளான எச்சரிக்கை பலகையை மீண்டும் முறையாக எழுதி வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்