வேகத்தடைகளில் வர்ணம் தீட்டப்படுமா?

Update: 2023-01-18 15:03 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, காரை கிராமத்தில் இருந்து அரியலூர் செல்லும் சாலையில் அளவுக்கு அதிகமாக வேகத்தடைகள் உள்ளது. ஆனால் அந்த வேகத்தடைகள் இருப்பதற்கு அடையாளமாக அதில் வெள்ளை நிற வர்ணம் தீட்டப்படவில்லை. இதனால் அந்த வழியாக சென்று வரும் வாகன ஓட்டிகள் வேகத்தடைகள் இருப்பதே தெரியாமல் விபத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயத்துடன் எழுந்து செல்வது தொடர் கதையாகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வேகத்தடைகளுக்கு வெள்ளை நிற வர்ணம் தீட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்