நெகமத்தில் இருந்து கக்கடவு வழியாக கோவைக்கு சாலை செல்கிறது. இந்த சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தென்னை நார் ெதாழிற்சாலைகளுக்கு கனரக வாகனங்கள் அதிகளவில் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலையில் கக்கடவு பகுதியில் அபாயகரமான வளைவு உள்ளது. அந்த வளைவில் திரும்பும்போது, வாகனங்கள் விபத்தில் சிக்கி கொள்கின்றன. எனவே அந்த சாலையை விரிவுபடுத்த அதிகாரிகள் முன்வர வேண்டும்.