தேவையற்ற வேகத்தடைகள்

Update: 2023-01-11 13:04 GMT

கரூர் மாவட்டம், புன்னம் ஊராட்சி பசுபதிபாளையத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்வதற்காக தார்சாலை போடப்பட்டுள்ளது. இந்த தார்சாலையின் குறுக்கே ஒரு குறிப்பிட்ட சிலர் தேவையற்ற முறையில் வேகத்தடையை உயரமாக அமைத்துள்ளனர். இதனால் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் உயரமாக வேகத்தடை இருப்பதால் வாகனங்கள் திடீரென செல்லும்போது வேகத்தடையில் ஏறி இறங்கும் போது நிலை தடுமாறி கீழே விழுந்து செல்கின்றனர். அதேபோல் இரவு நேரங்களில் உயரமான வேகத்தடை இருப்பதால் வேகத்தடை இருப்பது தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து செல்கின்றனர்.  

மேலும் செய்திகள்