முடிவுபெறாத சாலை பணி

Update: 2023-01-11 11:53 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியிலிருந்து கீரமங்கலம் செல்லும் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது. இதில் குளமங்கலம் தெற்கு கிராமத்திலிருந்து ஆவணத்தான்கோட்டை வரை நடந்து முடிந்த சாலை பணியில் மின் கம்பங்களுக்காக பல இடங்களில் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்ட பிறகும் விடுபட்ட சாலை பணிகள் முழுமையாக நடக்காததால் பெரிய பள்ளங்களாகி வேகமாக வரும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்