பாதியில் நிற்கும் சிமெண்டு சாலை

Update: 2023-01-11 11:51 GMT

திருச்சி மாவட்டம், திருவரங்கம் தாலுகா, ராம்ஜிநகர் கொத்தமங்கலம் பகுதியில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டு சாலை அமைக்கப்பட்டது. இந்த பணியானது முழுமையாக அமைக்கப்படாமல் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதால், மீதமுள்ள சாலைகள் மண் சாலைகளாகவே காட்சியளிக்கிறது. இதனால் மழை பெய்யும்போது இந்த மண் சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மீதமுள்ள பகுதிகளையும் சிமெண்டு சாலையாக அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்