சாலையில் பள்ளம்

Update: 2023-01-11 11:51 GMT

பெரம்பலூர்-ஆத்தூர் நெடுஞ்சாலையில் வேப்பந்தட்டை வேதநதி ஆற்றுப்பாலம் அருகே சாலையில் பெரிய அளவில் பள்ளமும், இதே சாலையில் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே சாலையில் ஒரு பள்ளமும் உள்ளது. முக்கிய நெடுஞ்சாலை என்பதால் இந்த சாலையில் அதிக போக்குவரத்து உள்ளது. இதில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பலர் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் தடுமாறி விழுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் உள்ள பள்ளங்களை தார் ஊற்றி சீரமைக்க வேண்டும் எனக்கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்