கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2023-01-08 13:51 GMT

கரூர் மாவட்டம், காகிதபுரம் மின்சார நிலைய அலுவலகம் எதிரில் உள்ள சாலை, மண் சாலையாகவும், குண்டு, குழியுமாக இருந்த இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்த நிலையில் தற்போது தார் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. தொடங்கப்பட்ட பணி 6 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்