எச்சரிக்கை பலகை இல்லை

Update: 2023-01-08 12:09 GMT

எச்சரிக்கை பலகை இல்லை

பல்லடம் தாசில்தார் அலுவலகம் எதிரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் ஒருவர் பலியானார். அதைத்தொடர்ந்து தற்போது வேகத்தடை அமைத்து உள்ளனர். வரவேற்கப்பட வேண்டிய செயல். ஆனால், வேகத்தடை உள்ளது என்பதை அறிந்து கொள்ள எச்சரிக்கை பலகை இல்லாதால் புதிதாக வரும் வாகன ஓட்டிகளுக்கு திடீர் வேகத்தடையால் தடுமாற்றம் ஏற்படுகிறது. புதுவேகத்தடைக்கு எச்சரிக்கை பலகை இல்லாமல் இதே நிலை இருந்தால் மேலும் விபத்துகள் நடக்கும் அபாயம் உள்ளது. சம்பந்தப்பட்ட துறை இதனை கவனத்தில் கொண்டு குறிப்பிட்ட தூரத்தில் உடனே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்

ர.மணிகண்டன்,பல்லடம்

9942051200

மேலும் செய்திகள்