உயர்மட்ட பாலம் கட்டபடுமா?

Update: 2023-01-08 09:44 GMT

மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டதாசனூர் பிரிவு முதல் கிட்டம்பாளையம் வரை உள்ள சாலையில் தரைப்பாலம் உள்ளது. மழைக்காலங்களில் தரைப்பாலத்தின் மேல் தண்ணீர் செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்களும், நடந்து செல்பவர்களும் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே சம்பந்தபட்ட துறை அதிகாரிகள் உடனடியாக உயர்மட்டபாலம் கட்ட நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்