விருதுநகர் தாலுகா ஆதிபட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தின் மயானத்திற்கு செல்ல பாதை வசதி இல்லாமல் ஓடை வழியாக எடுத்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.