விபத்து அபாயம்

Update: 2023-01-04 09:19 GMT

சூலூர் தாலுகாவிற்கு உட்பட்ட கருமத்தம்பட்டியில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் மண் குவிந்து வருகிறது. காற்று வீசும்போது புழுது பறந்து இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் நிலவுகிறது. மேலும் பிற வாகன ஓட்டிகளும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே மேம்பாலத்தில் மண் குவிவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்