அதிகரிக்கும் விபத்துகள்

Update: 2023-01-01 07:37 GMT

கோவை வ.உ.சி. மைதானத்தில் இருந்து மத்திய சிறைச்சாலைக்கு செல்லும் வழியில் பாலசுந்தரம் சாலையில் இருக்கும் ஆர்.டி.ஓ. அலுவலகத்துக்கு செல்லும் இணைப்பு சாலை வலதுபுறம் உள்ளது. இந்த சாலை பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. இதனால் அங்கு விபத்துகள் அதிகரித்து வருகிறது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்