சேறும், சகதியுமான சாலை

Update: 2023-01-01 07:36 GMT

கோவை மாநகராட்சி 12-வது வார்டு உடையாம்பாளையம் வஞ்சியம்மன் நகரில் குடிநீர் குழாய் பதிக்க தார்சாலை தோண்டப்பட்டது. அந்த பணி முடிவடைந்த பிறகும் தார்சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் மழை பெய்யும்போது சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் முதியர்கள், பெண்கள், பள்ளி குழந்தைகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. மேலும் வாகனங்கள் சென்று வருவதிலும் சிரமம் ஏற்படுகிறது. எனவே தார்சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்