பஸ் படிக்கட்டில் ஆபத்தான பயணம்

Update: 2022-07-18 16:08 GMT

திருக்கருக்காவூர்-தஞ்சை பகுதிக்கு இயக்கப்படும் அரசு பஸ்சில் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் அதிகளவில் பயணம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக இந்த வழிதடத்தில் இயக்கப்படும் பஸ் எப்போதும் கூட்ட நெரிசலுடன் காணப்படும். இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். இதனை எடுத்து காட்டும் விதமாக திட்டை கிராமத்தை பஸ் கடக்கும் போதும் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தினமும் காணலாம். இதனை பார்க்கும் பொதுமக்கள், பெற்றோர்கள் மாணவர்களின் நிலை குறித்து அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வதை தடுக்கவும், கூடுதல் பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்