மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா திருமணஞ்சேரி பகுதியில், காளி மற்றும் திருமங்கலம் செல்லும் இணைப்பு சாலையில் சிமெண்டு பாலம் இருந்தது. தற்போது இந்த பாலம் சேதமடைந்து இடிந்து காணப்படுகிறது. இதனால் இந்த வழியாக செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் விவசாய பொருட்களை எடுத்து செல்வதில் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பாலம் அமைத்து தரவேண்டும்.