பாலத்தில் ஏற்பட்ட பள்ளம்

Update: 2022-12-25 12:21 GMT
கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம்- பரமத்தி வேலூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே கடந்த சுமார் 70 ஆண்டுக்கு முன் புதிய பாலம் கட்டப்பட்டது. இதன் காரணமாக பாலத்தின் குறுக்கு நெடுகிலும் பள்ளங்கள் அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் தடுமாறி செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தில் உள்ள பெரிய குழியாக இருப்பதால் நிலை தருமாறி குழியில் விட்டு கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு வருகிறது. சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழும்போது பெரிய வாகனங்கள் வரும் போது பெரும் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே பொதுப்பணித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளங்களை சீரமைத்து விபத்துக்கள் நடக்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்