விருத்தாசலம் பஸ் நிலையம் பகுதியில் சாலை விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அங்குள்ள வடிகால் வாய்க்காலில் கழிவுநீர் செல்ல வழியின்றி, சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதோடு, நகர மக்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையை விரிவுப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.