வேகத்தடை வேண்டும்

Update: 2022-07-18 13:35 GMT

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு-விருதுநகர் சாலை தம்பிபட்டி ஊராட்சியில் அரசு ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள்  கல்வி கற்க வருகின்றனர். இந்நிலையில் இந்த சாலையில் வேகத்தடைகள் இல்லை.  வேகமாக வரும் வாகனங்களால் சாலையை கடக்க முயலும் மாணவர்கள் தினமும் சிறு, சிறு விபத்துகளில் சிக்குகிறார்கள். பெரும் அசம்பாதவிதம் ஏற்படும் முன்னர் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த சாலையில் வேகத்தடை அமைத்து வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.


மேலும் செய்திகள்