மதுரை-தேனி நெடுஞ்சாலையில் பி.பி.சாவடி, முடக்குச்சாலை பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பாலம் கட்டும் பணியானது விரைந்து முடிக்கப்படாமல் மந்தநிலையில் நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் இந்த சாலையில் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள். அதிக அளவிலான தூசி மற்றும் குப்பைகள் சாலையில் பறப்பதால் வாகன ஓட்டிகள் விபத்திலும் சிக்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மேம்பால பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.