குண்டும், குழியுமான தார்சாலை

Update: 2022-12-21 10:43 GMT

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம், மஞ்சாநாயக்கன்பட்டி ஊராட்சி மதுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து வடக்கே பாலப்பட்டி, தேவச்சிகவுண்டனூர், பொரணி பொம்மணத்துப்பட்டி ஆகிய ஊர்களுக்கு தார்சாலை செல்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட இந்த தார்சாலை மதுக்கரை பஸ் நிறுத்தத்தில் இருந்து பாலப்பட்டி வரை சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறிப்போனது. இதனால் இந்த சாலையில் பயணம் செய்யும் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு இந்த தார் சாலையை சீரமைத்து, தரமான தார் சாலையாக மாற்றி தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்