அடிப்படை வசதி நிறைவேற்றப்படுமா? (ராமநாதபுரம்)

Update: 2022-12-18 16:04 GMT

ராமநாதபுரம் மாவட்டம் வாகைவயல் கிராமத்தில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு தண்ணீர், மின்சாரம், பஸ் போன்ற அடிப்படை வசதியின்றி சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. போதிய பஸ் வசதி இல்லாததால் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டியுள்ளது. குடிநீரை மக்கள் காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே இப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்