வாகன ஓட்டிகளை பதம்பார்க்கும் சீமைக்கருவேல முள்

Update: 2022-12-18 11:00 GMT
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மண்டையூர் ஊராட்சிக்கு உட்பட்ட வங்காரம்பட்டியில் இருந்து வடுகப்பட்டி செல்லும் சாலையின் இருபுறமும் சீமைக்கருவேல மரங்கள் அதிக அளவில் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளது. இதனால் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே நான்கு சக்கர வாகனங்கள் வரும்போது ஒதுங்கி செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் ஓரமாக செல்லும்போது சீமைக்கருவேல முள் வாகன ஓட்டிகளை பதம் பார்ப்பதால் விபத்து ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அலுவலர்கள் வங்காரம்பட்டியில் இருந்து வடுகபட்டி செல்லும் சாலையின் இருபுறமும் அடர்ந்து வளர்ந்துள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்