சாலையில் தேங்கும் மழைநீர்

Update: 2022-12-18 10:47 GMT

கும்பகோணம் தாலுகா பெறுமாண்டி கிராமம் பழனிசாமி நகர் 4-வது குறுக்கு தெருவில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. குறிப்பாக கன மழையின் போது சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் சாலையில் நடந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. மேலும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்