தேங்கும் மழைநீர்

Update: 2022-12-14 12:55 GMT

விருதுநகர் மாவட்டம் சுத்தமடம் ஊராட்சி கஞ்சம்பட்டி கிராமத்தில் சாலையில் மழைநீர் தேங்குகிறது. இதனால் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதுடன் சாலையில் நடந்து செல்ல பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். தங்களது வாகனங்களை இயக்கவும் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்