வாகன ஓட்டிகள் அவதி

Update: 2022-12-14 12:40 GMT

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் தினமும் முதியவர்கள், பெண்கள் என ஏராளமானோர் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் ரவுண்டானாவை சுற்றிலும் சாலை ஆங்காங்கே படுமோசமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். மேலும் இரவு நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது. எனவே குண்டும், குழியுமான அந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்