குளமாகமாறிய சாலை

Update: 2022-12-14 11:49 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில் வடக்கு தெரு மற்றும் மேற்கு தெருவில் உள்ள மண் சாலையில் ஆங்காங்கே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைபெய்யும்போது மழைநீர் இந்த பள்ளங்களில் குளம்போல் தேங்கி உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் எவ்வளவு பெரிய பள்ளம் உள்ளது என கணிக்க முடியாமல் அதில் வாகனத்தை விட்டு நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். மேலும் இச்சாலை மழைபெய்யும்போது சேறும், சகதியுமாக காணப்படுவதால் முதியவர்கள், பெண்கள், பள்ளி சிறுவர், சிறுமிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்