சிரமப்படும் மக்கள்

Update: 2022-12-14 11:48 GMT
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியம், நக்கசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட அரவிந்தன் நகர் குடியிருப்பு பகுதியில் பெரும்பாலான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள சாலைகள் நீண்ட காலமாக மழையினால் சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் பெரியவர்களும், பள்ளி செல்லும் குழந்தைகளும் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனை பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் எடுத்துக்கூறியும், கடந்த முறை நடந்த கிராம சபை கூட்டத்தில் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. இதனால் இப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்