குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-14 09:06 GMT
ஆனைமலையில் போலீஸ் நிலையத்துக்கு செல்லும் சாலையானது முக்கிய சாலையாக இருப்பதாக தினமும் ஏராளமான வாகனங்கள் இயக்கப்படுகிறது. ஆனால் அந்த சாலை குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் அதில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை உடனடியாக சீரமைத்து தர அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்