தார்ரோடு போடப்படுமா?

Update: 2022-12-14 04:50 GMT

பெருந்துறையை அடுத்த சீனாபுரம் அருகே உள்ள காங்கிரசம்புதூரில் இருந்து கீழேரிபாளையம் வரை செல்லும் ரோட்டில் கற்கள் பெயர்ந்து பழுதடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த ரோட்டின் வழியாக பாதசாரிகள், வாகன ஓட்டிகள் செல்வதில் சிரமம் ஏற்படுகிறது. குறிப்பாக இருசக்கர வாகன ஓட்டிகள் அந்த ரோட்டில் செல்லும் போது தவறி கீழே விழுந்து காயம் அடைகிறார்கள். எனவே அங்கு தார் ரோடு போட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்