புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகா மழையூரில் இருந்து மங்கான் கொல்லைப்பட்டி வழியாக சூரக்காடு வரை செல்லும் தார்சாலை சிதிலமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த முதியவர்கள், கர்ப்பிணிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் நோயாளிகள் பெரும் சிரமப்படுகின்றனர். அவசர தேவைக்கு செல்லும் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் இந்த சாலையில் செல்லமுடியாததால் மாற்றுப்பாதையில் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.