மதுரை மாநகராட்சி 30- வது வார்டு மதிச்சியம் முத்து தெரு பகுதி சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது. சாலையில் இருந்த கற்கள் பெயர்ந்து மேடு, பள்ளங்களாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த சாலையில் வாகனங்களை இயக்கமுடியாமல் வாகனஓட்டிகள், பாதசாரிகள் சிரமப்படுகிறார்கள். அவ்வப்போது வாகனங்களும் பழுதாவதால் முத்துதெரு சாலையை சிமெண்டு ரோடாக மாற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.