குண்டும், குழியுமான சாலை

Update: 2022-12-04 14:11 GMT

பந்தலூர் அருகே உப்பட்டியில் இருந்து புஞ்சைவயல் வழியாக கொளப்பள்ளிக்கு இணைப்பு சாலை செல்கிறது. இந்த சாலை உடைந்து பல இடங்களில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகன ஓட்டிகள் தவறி விழுந்து காயம் அடையும் நிலை உள்ளது. எனவே அந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்