விருதுநகர் ரெயில்வே பீடர் ரோடு சேதமடைந்து காணப்படுகிறது. மழை பெய்தால் பள்ளங்களில் நீர் நிரம்பி கொசுக்கள் உற்பத்தியாகி தொற்றுநோய் பரவும் அபாயம் நிலவுகிறது. மேலும் இந்த சாலையில் வாகனங்களை இயக்கும் வாகனஓட்டிகள் அவ்வப்போது சிறு, சிறு விபத்துகளிலும் சிக்கி வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.