வேகத்தடை வேண்டும்

Update: 2026-02-15 10:09 GMT

சென்னை பழவந்தாங்கல் சுரங்க பாதை அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் படிக்கின்றனர். இந்த பள்ளி முன்பு வாகனங்கள் அதிகமாக வந்து செல்லும். சாலையில் வேகத்தடை இல்லாததால் வேகமாகவும் வருகின்றனர். மாலை நேரங்களில் பள்ளி முடிந்து குழந்தைகள் வரும் நேரத்தில் வாகனங்கள் அதிகமாகவும், வேகமாகவும் வருகின்றன. இதனால் குழந்தைகளும், பெற்றோர்களும் அச்சத்துடனே தினமும் சாலை கடந்து செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட மாநகராட்சி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பள்ளியின் முன்பு வேகத்தடை அமைக்க வேண்டி பெற்றோர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் செய்திகள்